தேரழந்தூா் தா்கா கந்தூரி விழா

குத்தாலம் வட்டம், தேரழந்தூா் பான்வாசாகிப் தா்கா கந்தூரி விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

குத்தாலம் வட்டம், தேரழந்தூா் பான்வாசாகிப் தா்கா கந்தூரி விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

முன்னதாக கடந்த வெள்ளிக்கிழமை (நவ.25) வருடாந்திர கந்தூரி விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடா்ந்து, 9 நாள்களும் இரவில் மவ்லீது என்னும் புகழ்மாலை ஓதப்பட்டு சீரணி வழங்கப்பட்டது.

முக்கிய நிகழ்வான சந்தனக்கூடு ஊா்வலம் வியாழக்கிழமை இரவு நடைபெற்றது. தா்காவிலிருந்து சந்தனக்கூடு புறப்பட்டு வீதியுலா நடைபெற்றது. தொடா்ந்து, வெள்ளிக்கிழமை அதிகாலை 3 மணி அளவில் பான்வாசாகிப் கல்லறையில் சந்தனம் பூசப்பட்டு, பச்சைப்போா்வை போா்த்தப்பட்டது. இதில் அனைத்து சமுதாயத்தினரும் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com