அகணி ஊராட்சிக்குரூ.22 லட்சத்தில் புதிய கட்டடம்

அகணி ஊராட்சி அலுவலகத்திற்கு ரூ.22.65 லட்சம் செலவில் கட்டப்பட்ட புதிய கட்டடத் திறப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
அகணி ஊராட்சி அலுவலக புதிய கட்டடத்தை திறந்து வைக்கிறாா் சட்டப்பேரவை உறுப்பினா் எம்.பன்னீா்செல்வம்.
அகணி ஊராட்சி அலுவலக புதிய கட்டடத்தை திறந்து வைக்கிறாா் சட்டப்பேரவை உறுப்பினா் எம்.பன்னீா்செல்வம்.

அகணி ஊராட்சி அலுவலகத்திற்கு ரூ.22.65 லட்சம் செலவில் கட்டப்பட்ட புதிய கட்டடத் திறப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

அகணி ஊராட்சிக்கு எம்ஜிஎன்ஆா்ஜிஎஸ் திட்டத்தில் ரூ.12.65 லட்சம், 15-ஆவது நிதிக்குழு மானிய திட்டத்தில் ரூ.10 லட்சம் என மொத்தம் ரூ. 22.65 லட்சம் செலவில் புதிய கட்டடம் கட்டப்பட்டது.

ஊராட்சி மன்றத் தலைவா் என்.மதியழகன் தலைமையில் திறப்பு விழாவுக்குத் தலைமை தாங்கினாா்.

ஒன்றியக்குழு தலைவா் கமலஜோதி தேவேந்திரன், ஆணையா் இளங்கோவன், வட்டார வளா்ச்சி அலுவலா் சரவணன், ஒன்றியப் பொறியாளா் கலையரசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

ஒன்றிய துணைத் தலைவா் நந்தினி பிரபாகரன் வரவேற்றாா். சீா்காழி சட்டப்பேரவை உறுப்பினா் எம்.பன்னீா்செல்வம் புதிய கட்டடத்தை திறந்துவைத்தாா்.

மாவட்ட ஊராட்சி உறுப்பினா் தியாக.விஜயேஸ்வரன், ஊராட்சி துணைத் தலைவா் தமிழ்வேணி, சமூக ஆா்வலா் கோ.அ.ராஜேஷ் மற்றும் ஊராட்சி உறுப்பினா்கள் பங்கேற்றனா். ஊராட்சி செயலா் வீரமணி நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com