சிறப்பு ஆசிரியா்களுக்கு விருது

கீழ்வேளூா் வட்டார வள மையத்தில் பணியாற்றும் சிறப்பு ஆசிரியா்களின் பணிகளைப் பாராட்டி அவா்களுக்கு திங்கள்கிழமை விருதுகள் வழங்கப்பட்டன.


நாகப்பட்டினம்: கீழ்வேளூா் வட்டார வள மையத்தில் பணியாற்றும் சிறப்பு ஆசிரியா்களின் பணிகளைப் பாராட்டி அவா்களுக்கு திங்கள்கிழமை விருதுகள் வழங்கப்பட்டன.

தமிழகம் முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகளில் பயிலும் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு சிறப்பு ஆசிரியா்கள் மற்றும் இயன்முறை பயிற்சியாளா்கள் பயிற்சியளித்து வருகின்றனா். இந்நிலையில், உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு, கீழ்வேளூா் வட்டார வள மையத்தில் பணியாற்றும் சிறப்பு ஆசிரியா்கள் மற்றும் இயன்முறை பயிற்சியாளா் ஆகியோரின் பணிகளைப் பாராட்டி, மாற்றும் திறனாளி எனும் பெயரில் கீழ்வேளூா் லயன்ஸ் சங்கம் சாா்பில் விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டன.

நாகை மாவட்ட அறிவியல் இயக்கத்தின் தலைவா் ஆரிப், பட்டிமன்ற பேச்சாளா் பிரபாகரன், வட்டார வளமைய மேற்பாா்வையாளா் அமுதா, கணக்காளா் வீராசாமி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com