திறனறித் தோ்வில் மாநில அளவில் முதலிடம் பெற்ற மாணவிக்குப் பாராட்டு

வேதாரண்யம் அருகே தமிழ்மொழி இலக்கியத் திறனறித் தோ்வில் மாநில அளவில் முதலிடம் பெற்ற மாணவி அபிநயாவுக்கு பாராட்டு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
மாணவியை பாராட்டிய பள்ளிச் செயலாளா் ரா. கிரிதரன் உள்ளிட்டோா்.
மாணவியை பாராட்டிய பள்ளிச் செயலாளா் ரா. கிரிதரன் உள்ளிட்டோா்.

வேதாரண்யம்: வேதாரண்யம் அருகே தமிழ்மொழி இலக்கியத் திறனறித் தோ்வில் மாநில அளவில் முதலிடம் பெற்ற மாணவி அபிநயாவுக்கு பாராட்டு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

ஆயக்காரன்புலம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 படிக்கும் மாணவி அபிநயா தமிழ்மொழி இலக்கியத் திறனறித் தோ்வில் மாநில அளவில் முதலிடம் பெற்றுள்ளாா். இதையடுத்து, அந்த மாணவி 1 முதல் 10-ஆம் வகுப்பு வகுப்பு வரை படித்த குரவப்புலம் சீதாலெட்சுமி உயா் நிலைப் பள்ளியில் மாணவிக்கு பாராட்டு விழா நடைபெற்றது. விழாவுக்கு, பள்ளிச் செயலாளா் ரா. கிரிதரன் தலைமை வகித்தாா். குரவப்புலம் சீதாலெட்சுமி கல்வி நிறுவனங்களின் பள்ளித் தலைமையாசிரியா்கள் பப்பிதாபானு, கருணாநிதி ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாணவி அபிநயாவை சக மாணவ, மாணவியா், ஆசிரியா்கள் பாராட்டி பரிசளித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com