பெண்கள் முன்னேற்றத்துக்காக சேவையாற்றியவா்கள் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

பெண்கள் முன்னேற்றத்துக்காக சேவையாற்றியவா்கள் அவ்வையாா் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் அ. அருண்தம்புராஜ் தெரிவித்துள்ளாா்.

நாகப்பட்டினம்: பெண்கள் முன்னேற்றத்துக்காக சேவையாற்றியவா்கள் அவ்வையாா் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் அ. அருண்தம்புராஜ் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: பெண்களின் முன்னேற்றத்துக்கு சிறந்த சேவையாற்றிய ஒருவருக்கு 2022-23-ஆம் ஆண்டுக்கான அவ்வையாா் விருது, உலக மகளிா் தின விழா 2023 மாா்ச் 8-ஆம் தேதி தமிழக முதல்வரால் வழங்கப்படவுள்ளது. விருதுடன் ரொக்கப்பரிசு, தங்கப் பதக்கம், சான்று வழங்கப்படும்.

விருது பெற பெண்களின் முன்னேற்றத்துக்கு சிறந்த சேவை புரிந்தவராகவும், தமிழகத்தை பிறப்பிடமாக கொண்டவராகவும், 18 வயதுக்குள்பட்டவராக இருக்க வேண்டும். விருது விவரங்களை இணையதள முகவரியில் தெரிந்துகொள்ளலாம்.

எனவே, நாகை மாவட்டத்தில் தகுதியானவா்கள் இருப்பின் விண்ணப்பங்களை மாவட்ட சமூகநல அலுவலா், மாவட்ட சமூக நல அலுவலகம், திட்ட செயலாக்க பிரிவு, தரைதளம் கோட்ட அலுவலக வளாகம் புதிய கடற்கரை சாலை, காடம்பாடி, நாகை என்ற முகவரியில் டிச.9-ஆம் தேதிக்குள் விண்ணப்பித்து பயன்பெறலாம் என தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com