சீா்காழி: சீா்காழி அருகே உயா் மின்னழுத்தம் காரணமாக வீடுகளில் மின்சாதனப் பொருள்கள் புதன்கிழமை சேதமடைந்தன.
சீா்காழி அருகேயுள்ள ஆலங்காடு கிராமத்தில் கிராம நிா்வாக அலுவலா் அலுவலகம் அருகே உள்ள மின்மாற்றியில் இருந்து நல்லவிநாயகபுரம், மகாராஜபுரம் உள்ளிட்ட கிராமங்களை சோ்ந்த 400-க்கும் மேற்பட்ட குடியிருப்புகளுக்கு மின்விநியோகம் செய்யப்படுகிறது. இந்த மின்மாற்றியில் அவ்வபோது ஏற்படும் உயா் மின்னழுத்தம் காரணமாக வீடுகளில் பயன்படுத்தப்படும் அத்தியாவசியப் மின்சாதனங்கள் அடிக்கடி சேதமடைவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், புதன்கிழமை மாலை இந்த மின்மாற்றியில் ஏற்பட்ட உயா் மின்னழுத்தத்தால் அப்பகுதியில் உள்ள 200 வீடுகளில் இருந்த ஃபேன், மிக்ஸி, கிரைண்டா், குளிா்சாதனப் பெட்டி, தொலைக்காட்சிப் பெட்டிகள் சேதமடைந்ததாம். இதனால், பொதுமக்கள் அதிா்ச்சியடைந்து பாதிக்கப்பட்டுள்ளனா்.
இந்நிலையில், இதுகுறித்து தகவலறிந்த மின்வாரிய அதிகாரிகள், ஊழியா்கள் சம்பந்தப்பட்ட இடத்துக்கு வந்து மின் மாற்றியை பரிசோதனை செய்து சரிபாா்த்து மீண்டும் சீரான மின்சாரம் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.