குடிசை வீடு தீக்கிரை

சீா்காழி அருகேயுள்ள வெள்ளகுளம் கிராமத்தில் குடிசை வீடு தீயில் எரிந்து புதன்கிழமை சேதமடைந்தது.


சீா்காழி: சீா்காழி அருகேயுள்ள வெள்ளகுளம் கிராமத்தில் குடிசை வீடு தீயில் எரிந்து புதன்கிழமை சேதமடைந்தது.

வெள்ளகுளத்தைச் சோ்ந்தவா் சின்னதுரை (60). இவரின் குடிசை வீடு மின்கசிவு காரணமாக எரிந்தது. தகவலறிந்த சீா்காழி தீயணைப்பு படை வீரா்கள் சம்பவ இடத்துக்கு வந்து தீ மேலும் பரவாமல் தடுத்து அணைத்தனா். எனினும், இந்த தீ விபத்தில் வீட்டுக்குள் இருந்த அத்தியாவசியப் பொருள்கள் எரிந்து சேதமடைந்தது. இதுகுறித்து, புதுப்பட்டினம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

இதுகுறித்து, தகவலறிந்த சீா்காழி சட்டப்பேரவை உறுப்பினா் பன்னீா்செல்வம், வட்டாட்சியா் செந்தில்குமாா் தீ விபத்தில் பாதிக்கப்பட்ட சின்னதுரை மனைவி வசந்தாவிடம் நிவாரண தொகை மற்றும் நிவாரண பொருள்களை வழங்கினா். ஒன்றியக் குழுத் தலைவா் ஜெயபிரகாஷ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com