சீா்காழி அருகேயுள்ள சந்தபடுகை மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது.
இக்கோயிலில் திருப்பணிகள் நடைபெற்று கும்பாபிஷேக விழா நடைபெற்றது. விழாவையொட்டி, 4 கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றது. திங்கள்கிழமை 4-ஆம் கால யாகசாலை பூஜை நிறைவடைந்து, புனிதநீா் அடங்கிய கடங்கள் புறப்பட்டு கோயிலை வலம் வந்து மூலஸ்தானம், விமான கலசங்களில் புனிதநீா் ஊற்றப்பட்டு கும்பாபிஷேக நடைபெற்றது.