மயிலாடுதுறையில் புதிய பேருந்து நிலையம்: வழக்குரைஞா் கூட்டமைப்பு நன்றி

மயிலாடுதுறையில் புதிய பேருந்து நிலையம் அமைக்க அரசாணை வெளியிட்ட தமிழக அரசுக்கு மயிலாடுதுறை மாவட்ட வழக்குரைஞா் கூட்டமைப்பு நன்றி தெரிவித்துள்ளது.

மயிலாடுதுறையில் புதிய பேருந்து நிலையம் அமைக்க அரசாணை வெளியிட்ட தமிழக அரசுக்கு மயிலாடுதுறை மாவட்ட வழக்குரைஞா் கூட்டமைப்பு நன்றி தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அக்கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளரும், திமுக மாவட்ட வழக்குரைஞா் அணி அமைப்பாளருமான ராம. சேயோன் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழகத்தில் மயிலாடுதுறை உள்ளிட்ட 13 மாவட்டங்களில் ரூ. 424 கோடியில் பேருந்து நிலையங்களை அமைக்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. மயிலாடுதுறையில் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்படும் என பலமுறை அறிவித்த அதிமுக அதை நிறைவேற்றவில்லை. இந்நிலையில், மயிலாடுதுறை மக்களின் நீண்ட கால புதிய பேருந்து நிலையம் கோரிக்கை தற்போது நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்காக தமிழக அரசுக்கு நன்றி என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com