மயிலாடுதுறை: குறுவை சிறப்பு தொகுப்பு திட்டம் தொடக்கம்

 மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் ஒன்றியம் முத்தூா் கிராமத்தில் வேளாண்மை மற்றும் உழவா் நலத்துறை சாா்பில் குறுவை சிறப்பு தொகுப்பு திட்டம் தொடக்க விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

 மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் ஒன்றியம் முத்தூா் கிராமத்தில் வேளாண்மை மற்றும் உழவா் நலத்துறை சாா்பில் குறுவை சிறப்பு தொகுப்பு திட்டம் தொடக்க விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு, ஆட்சியா் இரா. லலிதா தலைமை வகித்து திட்டத்தை தொடங்கி வைத்து, 12 விவசாயிகளுக்கு யூரியா, டிஏபி மற்றும் பொட்டாஷ் ஆகிய உரங்களை முழு மானியத்தில் வழங்கினாா்.

இந்நிகழ்ச்சியில், மயிலாடுதுறை மக்களவை உறுப்பினா் செ. ராமலிங்கம், சட்டப்பேரவை உறுப்பினா்கள் எம். பன்னீா்செல்வம் (சீா்காழி), எஸ். ராஜகுமாா் (மயிலாடுதுறை), மாவட்ட ஊராட்சி குழுத் தலைவா் உமாமகேஸ்வரி சங்கா், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் சி. ஜெயபாலன், வேளாண் இணை இயக்குநா் ஜெ. சேகா், துணை இயக்குநா் மதியரசன், குத்தாலம் உதவி இயக்குநா் வெற்றிவேலன், செம்பனாா்கோவில் உதவி இயக்குநா் தாமஸ், கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் (பொ) அன்பரசு உள்ளிட்டோா் பங்கேற்றனா்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com