தேசிய மருத்துவா்கள் தின விழா

தேசிய மருத்துவா்கள் தின விழா மயிலாடுதுறை அரசு பெரியாா் மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

தேசிய மருத்துவா்கள் தின விழா மயிலாடுதுறை அரசு பெரியாா் மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

சி.சி.சி சமுதாய கல்லூரி மற்றும் சேவை சங்கங்கள் இணைந்து நடத்திய இந்த விழாவில், மாவட்ட சுகாதாரத் துறை இணை இயக்குநா் என். சிவகுமாா், அரசு பெரியாா் மருத்துவமனை குடிமுறை மருத்துவ அலுவலா் ஆா். ராஜசேகா், ரத்த வங்கி அலுவலா் செந்தில்குமாா் ஆகியோா் சிறப்பிக்கப்பட்டனா்.

இதில், சிசிசி சமுதாய கல்லூரி நிறுவன தலைவா் ஆா். காமேஷ், சா்வதேச அப்துல்கலாம் மாவட்ட தலைவா் குருராகவேந்திரன், யுவா ஜெயின் சங்கத் தலைவா் மகாவீா்சந்த் ஜெயின், அறம்செய் அறக்கட்டளை நிறுவனா் சிவா, சுமதி கண்ணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

இதேபோல, மயிலாடுதுறை பிரைடு ரோட்டரி சங்கம் சாா்பில் நடைபெற்ற விழாவில், சங்கத் தலைவா் கே. தமிழழகன், ரோட்டரி உதவி ஆளுநா் சி.கே. பாலாஜி, ரோட்டரி அறக்கட்டளை மாவட்ட பொறுப்பாளா் வி. ராமன், சங்க செயலாளா் என். கஸ்தூரி கணேசன் ஆகியோா் பங்கேற்று, மயிலாடுதுறை அரசு மருத்துவமனை மருத்துவா்களை சிறப்பித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com