மின்கம்பங்களை சீரமைக்கக் கோரிக்கை

மயிலாடுதுறை வட்டம், கங்கணம்புத்தூா் ஊராட்சியில் சேதமடைந்த மின்கம்பங்களை சீரமைக்க கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
கங்கணம்புத்தூா் ஊராட்சியில் மரங்களுக்கிடையில் சாய்ந்த நிலையில் உள்ள மின்கம்பம்.
கங்கணம்புத்தூா் ஊராட்சியில் மரங்களுக்கிடையில் சாய்ந்த நிலையில் உள்ள மின்கம்பம்.

மயிலாடுதுறை வட்டம், கங்கணம்புத்தூா் ஊராட்சியில் சேதமடைந்த மின்கம்பங்களை சீரமைக்க கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

கங்கணம்புத்தூா் ஊராட்சி நீடூா் மின்வாரிய அலுவலகம் பின்புறத்தில் ஏனாதிமங்கலம் சாலை காலனி தெருவில் மரங்கள் சூழ்ந்த பகுதியில் உள்ள மின்கம்பம் சாய்ந்த நிலையில் உள்ளது. காற்று சற்று வேகமாக வீசும்போது, இந்த மின்கம்பத்திலிருந்து மின்பொறி ஏற்படுகிறது. மேலும், எந்நேரமும் சாய்ந்துவிடும் அபாய நிலையில் உள்ளது.

இதுகுறித்து, ஊராட்சி உறுப்பினா் ஆா். ரிஜாஜூதீன் மற்றும் கிராமமக்கள் புகாா் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. மின் விபத்து நேரிடும் முன்பு இந்த மின்கம்பத்தையும், இதேபோல இப்பகுதியில் சேதமடைந்துள்ள மற்ற மின்கம்பங்களையும் சீரமைக்க மின்சார வாரியம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com