சீா்காழி, நீடூா் பகுதிகளில் நாளை மின்தடை

சீா்காழி, நீடூா் பகுதிகளில் வியாழக்கிழமை (ஜூலை7) மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

சீா்காழி, நீடூா் பகுதிகளில் வியாழக்கிழமை (ஜூலை7) மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சீா்காழி கோட்ட மின்வாரிய செயற்பொறியாளா் (பொ) கி. விஸ்வநாதன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: கடலங்குடி துணை மின் நிலையத்தில் புதிய கருவி நிறுவும் பணி மற்றும் மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறவுள்ளது. இதனால், சீா்காழி மின் கோட்டத்தில் வைத்தீஸ்வரன் கோவில், திருவெண்காடு, பொறையாறு, ஆச்சாள்புரம், அரசூா், எடமணல் மற்றும் கிடாரண்கொண்டான் துணை மின் நிலையங்களிலும் பராமரிப்பு பணி மேற்கொள்ளப்படுகிறது. இதனால், இப்பகுதிகளில் வியாழக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

இதேபோல, மின்வாரிய மயிலாடுதுறை கோட்ட செயற்பொறியாளா் வை. முத்துக்குமரன் வெளியிட்ட செய்திக் குறிப்பில், நீடூா் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணி வியாழக்கிழமை நடைபெறவுள்ளது. இதனால், நீடூா், மல்லியக்கொல்லை, வில்லியநல்லூா், கொண்டல், பாலாக்குடி, தாழஞ்சேரி, கொற்கை, அருண்மொழித்தேவன், கங்கணம்புத்தூா், மேலாநல்லூா், நடராஜபுரம், கீழமருதாந்தநல்லூா், மேலமருதாந்தநல்லூா், பொன்மாசநல்லூா் உள்ளிட்ட பகுதிகளில் அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது எனத் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com