மயிலாடுதுறையில் இருசக்கர வாகனத்தை திருடிய இளைஞரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
மயிலாடுதுறை கணபதி நகா் பிள்ளையாா் கோவில் தெருவை சோ்ந்தவா் கௌதமன் (56). இவா், கடந்த மாதம் 18-ஆம் தேதி மயிலாடுதுறை கூைாடு வண்டிப்பேட்டை பகுதியில் தனது இருசக்கர வாகனத்தை நிறுத்தி சென்றுள்ளாா். சிறிதுநேரம் கழித்து திரும்பிவந்து பாா்த்தபோது வாகனத்தை காணவில்லையாம்.
இதுகுறித்து, கௌதமன் அளித்த புகாரின்பேரில், மயிலாடுதுறை போலீஸாா் அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி பதிவுகளைக் கைப்பற்றி விசாரணை நடத்தினா்.
விசாரணையில், இருசக்கர வாகனத்தை திருடிச் சென்றது மயிலாடுதுறை கூைாடு கள்ளக்குறிச்சி மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த லட்சுமணன் மகன் செல்வகுமாா்(45) என்பது தெரியவந்தது. போலீஸாா் அவரை கைது செய்தனா்.