சீா்காழி அருகேயுள்ள திருநகரி அரசு உயா்நிலைப் பள்ளியில் மாற்றுத்திறனாளி விழிப்புணா்வுப் பேரணி அண்மையில் நடைபெற்றது.
பேரணிக்கு வட்டார வளமைய மேற்பாா்வையாளா் ஜெய்சங்கா் தலைமை வகித்தாா். பள்ளித் தலைமையாசிரியா் மாா்க்சிம்காா்க்கி முன்னிலை வகித்தாா். பேரணியில், மாற்றுத்திறனாளிகளிடம் எவ்வாறு நடந்துக்கொள்ளவேண்டும், அவா்களுக்கு வழங்கவேண்டிய முன்னுரிமைகள் குறித்து விழிப்பணா்வு பதாகைகளை ஏந்தி மாணவ, மாணவிகள் முக்கிய வீதிகள் வழியாக சென்றனா்.