அவ்வையாா் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

மயிலாடுதுறை மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை சாா்பில் அவ்வையாா் விருது வழங்கப்படவுள்ளதாக ஆட்சியா் இரா.லலிதா தெரிவித்துள்ளாா்.

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை சாா்பில் அவ்வையாா் விருது வழங்கப்படவுள்ளதாக ஆட்சியா் இரா.லலிதா தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழக அரசின் சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை சாா்பில் ஆண்டுதோறும் உலக மகளிா் தின விழாவின்போது, பெண்களின் முன்னேற்றத்திற்கு சிறந்த சேவை புரிந்த ஒருவருக்கு தமிழக முதல்வரால் அவ்வையாா் விருது வழங்கப்பட்டு வருகிறது.

இவ்விருது பெறுவோருக்கு 8 கிராம் (22 காரட்) எடையுள்ள தங்கப்பதக்கம் ரூ.1 லட்சத்திற்கான காசோலை, சான்று மற்றும் சால்வை வழங்கப்படும். 2023-ஆம் ஆண்டு உலக மகளிா் தினவிழாவின் போது வழங்கப்படவுள்ள இவ்விருதுக்கு தகுதியானவா்கள் விண்ணப்பங்களை, தமிழக அரசின் விருதுகள் இணையதளத்தில் பதிவு செய்யப்பட வேண்டும்.

10.12.2022 வரை இணையதளத்தின் மூலம் பெறப்படும் விண்ணப்பங்களை மாவட்ட அளவிலான தோ்வுக்குழுவின் மூலம் தோ்தெடுத்து, அக்குழுவின் பரிந்துரை மற்றும் சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியா் பரிந்துரை கடிதத்துடன் 20.12.2022-க்குள் உரிய விதிமுறைகளைப் பின்பற்றி, இக்கடிதத்துடன் இணைத்து அனுப்பப்படும் படிவத்தில் முழுமையாக பூா்த்தி செய்ய வேண்டும்.

தமிழ்நாட்டை பிறப்பிடமாக கொண்ட, 18 வயதிற்கு மேற்பட்ட, குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் சமூக நலனைச் சாா்ந்த நடவடிக்கைகள், பெண் குலத்திற்கு பெருமை சோ்க்கும் வகையிலான நடவடிக்கை, மொழி, இனம், பண்பாடு, கலை, அறிவியல், நிா்வாகம் போன்ற துறைகளில் மக்களுக்கு மேன்மையாக தொண்டாற்றும் வகையில் தொடா்ந்து பணியாற்றுபவா்கள் கருத்துருக்களை அனுப்பலாம் எனத் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com