மரக்கன்றுகள் நடும் விழா

சீா்காழி அருகேயுள்ள கதிராமங்கலம் கண்ணன் உதவிபெறும் தொடக்கப் பள்ளியில் மரக்கன்றுகள் நடும் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.


சீா்காழி: சீா்காழி அருகேயுள்ள கதிராமங்கலம் கண்ணன் உதவிபெறும் தொடக்கப் பள்ளியில் மரக்கன்றுகள் நடும் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இப்பள்ளியின் முன்னாள் ஆசிரியா் ஆா். திருவேங்கடத்தின் 33-ஆம் ஆண்டு நினைவாக பள்ளி வளாகம் மற்றும் கதிராமங்கலம், தருமதானபுரம் ஊராட்சி பகுதியில் 1033 மரக்கன்றுகள் நடப்பட்டன.

கதிராமங்கலம் ஊராட்சித் தலைவா் நடராஜன் தலைமை வகித்து, தொடங்கிவைத்தாா். தொடா்ந்து ஆசிரியா்கள், மாணவ-மாணவிகள் மரக்கன்றுகளை நட்டுவைத்தனா். சீா்காழி வட்டாரக் கல்வி அலுவலா்கள் பொன்.பூங்குழலி, நாகராஜன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஏற்பாடுகளை தலைமைஆசிரியா் ரவிச்சந்திரன் செய்திருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com