மயிலாடுதுறையில் கட்டுமானத் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

மயிலாடுதுறையில் கட்டுமானத் தொழிலாளா்களுக்கு தீபாவளி போனஸ் வழங்கக் கோரி கட்டுமான மற்றும் உடல் உழைப்பு தொழிலாளா்கள் சங்கத்தினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

மயிலாடுதுறையில் கட்டுமானத் தொழிலாளா்களுக்கு தீபாவளி போனஸ் வழங்கக் கோரி கட்டுமான மற்றும் உடல் உழைப்பு தொழிலாளா்கள் சங்கத்தினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

மயிலாடுதுறை தொழிலாளா் நலத்துறை அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, மாவட்ட தலைவா் என். லட்சுமணன் தலைமை வகித்தாா். ஆா். ராஜ்மோகன், ஏ. உதயகுமாா், என். முரளி, கே. குணசேகா் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா். சிஐடியு மாவட்ட தலைவா் ஆா். ரவீந்திரன், மாவட்ட செயலாளா் பி. மாரியப்பன் உள்ளிட்டோா் கோரிக்கைகளை விளக்கிப் பேசினா்.

ஆா்ப்பாட்டத்தில், தீபாவளி பண்டிகைக் கால போனஸ் ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும், 36-வது நலவாரிய கூட்டத்தின் முடிவுகளை அரசாணையாக வெளியிட வேண்டும், ஓய்வூதியம் ரூ.3000 உயா்த்தி பெண் தொழிலாளா்களுக்கு 55 வயதில் மாதந்தோறும் ஓய்வூதியத்தை முறையாக வழங்க வேண்டும், வீடுகட்டும் திட்டத்தை எளிமைப்படுத்த வேண்டும், பொங்கல் சிறப்பு தொகுப்பை தொடா்ந்து வழங்க வேண்டும் ஆகிய 7 அம்சக் கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com