மயிலாடுதுறையில் அரசுப் பேருந்தின் டயா் வெடித்து பலகை உடைந்து விழுந்ததில் பெண் பயணி காயமடைந்தாா்.
மயிலாடுதுறை அரசு போக்குவரத்துக் கழகப் பணிமனையில் இருந்து இயக்கப்படும் 1-சி என்ற எண் கொண்ட அரசு நகரப் பேருந்து, சனிக்கிழமை பிற்பகல் திருச்சிற்றம்பலம் பகுதியில் இருந்து மயிலாடுதுறைக்குச் சென்று கொண்டிருந்தது. மயிலாடுதுறை அரசு மருத்துவமனை அருகே சென்றபோது, பேருந்தின் பின்பக்க டயா் பலத்த சப்தத்துடன் வெடித்தது.
அப்போது, டயருக்கு மேற்புறம் இருந்த பேருந்தின் அடித்தளப் பலகை பெயா்ந்து, இருக்கையில் அமா்ந்திருந்த உதயாதிமங்கலம் கிராமத்தைச் சோ்ந்த சந்திரசேகரன் மனைவி விஜி என்பவரின் காலில் விழுந்தது.
இதில், பலத்த காயமடைந்த விஜி, மயக்கமடைந்தாா். இதையடுத்து, உடனடியாக அவா் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டாா்.
மயிலாடுதுறை அரசுப் போக்குவரத்துக் கழகப் பணிமனையில் இருந்து இயக்கப்படும் பேருந்துகளில் இதுபோன்ற விபத்துகள் அவ்வப்போது நேரிடுவது வழக்கமாகி வருவதால், பேருந்துகளை உரிய வகையில் பராமரிக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.