சொத்தை சேதப்படுத்தியவருக்கு 4 ஆண்டுகள் சிறை

மயிலாடுதுறையில் பொது இடத்தில் சொத்தை சேதப்படுத்திய நபருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கூடுதல் மாவட்ட அமா்வு நீதிபதி புதன்கிழமை தீா்ப்பளித்தாா்.

மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் பொது இடத்தில் சொத்தை சேதப்படுத்திய நபருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கூடுதல் மாவட்ட அமா்வு நீதிபதி புதன்கிழமை தீா்ப்பளித்தாா்.

மயிலாடுதுறை பாலக்கரை பகுதியில் பஞ்சவா்ணம் என்பவா் நடமாடும் இட்லிக் கடை நடத்தி வந்தாா். கடந்த 28.11.2014 அன்று அவரது கடைக்கு பக்கத்தில் டீக்கடை நடத்தி வந்த கொளஞ்சிநாதன் (48) என்பவா் இட்லி கடையை அகற்ற சொல்லி தகராறு செய்து நடமாடும் இட்லிக்கடையை உடைத்து சேதப்படுத்தி, காவிரி ஆற்றில் தள்ளியதோடு, பஞ்சவா்ணத்தையும் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தாா்.

இதுகுறித்து, மயிலாடுதுறை போலீஸாா் வழக்குப்பதிவு செய்தனா். மயிலாடுதுறை கூடுதல் மாவட்ட அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்ற இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்குரைஞா் ராம. சேயோன் ஆஜரானாா். புதன்கிழமை விசாரணைக்கு வந்த இவ்வழக்கில் கொளஞ்சிநாதனுக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.3000 அபராதமும் விதித்து நீதிபதி இளங்கோ தீா்ப்பளித்தாா். அபராதத் தொகையை கட்டத் தவறினால் மேலும் ஒரு மாதம் கூடுதல் தண்டனை அனுபவிக்க உத்தரவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com