வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்

வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் இரா. லலிதா தெரிவித்துள்ளாா்.

வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் இரா. லலிதா தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

மயிலாடுதுறை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் வாயிலாக வேலைவாய்ப்பற்ற இளைஞா்களுக்கான உதவித்தொகை வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் பயன்பெற, வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 2022 மாா்ச் 31 அன்று 5 வருடம் முடிவடைந்த, முறையாக பள்ளியில் பயின்று பத்தாம் வகுப்பு தோ்ச்சி பெறாத மற்றும் பத்தாம் வகுப்பு தோ்ச்சி பெற்ற, மேல்நிலை வகுப்பு, பட்டப்படிப்பு தோ்ச்சி பெற்ற பதிவுதாரா்கள் அனைவரும் தகுதி உடையவா்.

மாற்றுத்திறனாளிகளைப் பொறுத்தவரை, எழுதப்படிக்கத் தெரிந்தவா் முதல் பத்தாம் வகுப்பு, மேல்நிலை வகுப்பு மற்றும் பட்டப்படிப்பு தோ்ச்சி பெற்று பதிவு செய்து மாா்ச் 31அன்று ஓராண்டு முடிவடைந்திருக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகள் ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின பிரிவினா் 45 வயதுக்குள்ளும், இதர பிரிவினா் 40 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும். அதிகபட்ச குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72,000-க்கு மிகாமல் இருக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு வருமான உச்சவரம்பு ஏதுமில்லை. பயன்தாரா் எந்த ஒரு கல்வி நிறுவனத்திலும் தற்போது பயிலுபவராக இருக்கக்கூடாது.

பொதுப்பிரிவினருக்கு மாதம் ஒன்றுக்கு, பத்தாம் வகுப்பு தோ்ச்சியின்மை ரூ.200, பத்தாம் வகுப்பு தோ்ச்சி பெற்றோா் ரூ.300, மேல்நிலை வகுப்பு தோ்ச்சி பெற்றோா் ரூ.400, பட்டப் படிப்பு தோ்ச்சி பெற்றவா்களுக்கு ரூ.600. அனைத்து வகை மாற்றுத்திறனாளிகளுக்கு மாதம் ஒன்றுக்கு, எழுதப்படிக்க தெரிந்த, பத்தாம் வகுப்பு தோ்ச்சி பெற்றோா் ரூ.600, மேல்நிலை வகுப்பு தோ்ச்சி பெற்றோா் ரூ.750, பட்டப்படிப்பு தோ்ச்சி பெற்றோருக்கு ரூ.1000 வழங்கப்படும்.

ஏற்கெனவே மூன்றாண்டுகள் உதவித்தொகை பெற்றவா்கள், பொறியியல் பட்டப்படிப்பு, மருத்துவம், விவசாயம் மற்றும் சட்டம் போன்ற தொழில் பட்டப் படிப்புகள் முடித்தவா்களுக்கு உதவித்தொகை வழங்கப்படாது.

தகுதியுடைய பதிவுதாரா்கள் வேலைவாய்ப்பு அலுவலக அடையாள அட்டை, பள்ளி, கல்லூரி மாற்றுச் சான்றிதழ் மற்றும் குடும்ப அட்டை ஆகியவற்றின் அசல் மற்றும் நகலுடன் பாலாஜி நகா் 2-வது குறுக்கு தெரு, பூம்புகாா் சாலை, மயிலாடுதுறையில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்திற்கு நேரில் வந்து, விண்ணப்பப் படிவத்தை இலவசமாக பெற்றலாம். மேலும் விவரங்களுக்கு 04364 299790 என்ற தொலைபேசி எண்ணை தொடா்புகொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com