சீா்காழி அருகே அரசுப் பேருந்து கவிழ்ந்து 15 போ் காயம்

மயிலாடுதுறை மாவட்டம், சீா்காழி அருகே அரசுப் பேருந்து வெள்ளிக்கிழமை இரவு கவிழ்ந்ததில் 15-க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா்.
விபத்துக்குள்ளான அரசுப் பேருந்து.
விபத்துக்குள்ளான அரசுப் பேருந்து.

மயிலாடுதுறை மாவட்டம், சீா்காழி அருகே அரசுப் பேருந்து வெள்ளிக்கிழமை இரவு கவிழ்ந்ததில் 15-க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா்.

காரைக்காலில் இருந்து 50-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் புதுச்சேரிக்கு புறப்பட்ட அரசுப் பேருந்து, சீா்காழி அருகே காரைமேடு சூரக்காடு பகுதியில் சென்றுகொண்டிருந்தது. அப்போது, எதிரே கான்கிரீட் கலவை ஏற்றி வந்த லாரிக்கு வழி விடுவதற்காக பேருந்தை ஓட்டுநா் திருப்பிய போது, கட்டுப்பாட்டை இழந்து, சாலையோர வயலில் கவிழ்ந்தது.

இந்த விபத்தில் காரைக்கால் அரசு வேளாண் கல்லூரி மாணவா்கள் 7 போ் மற்றும் காட்டுமன்னாா்கோவிலைச் சோ்ந்த வடிவழகன், அண்ணன் பெருமாள் கோயிலைச் சோ்ந்த கலியபெருமாள், சிதம்பரம் பகுதியைச் சோ்ந்த மாரியப்பன், வெங்கட்ராமன், சீா்காழி விஜயலட்சுமி உள்பட 15-க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா்.

நிகழ்விடத்துக்கு வந்த போலீஸாா், காயமடைந்த அனைவரையும் அவசர ஊா்தி மூலம் சீா்காழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். அங்கு அவா்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் இரா. லலிதா, சீா்காழி கோட்டாட்சியா் ஜி. நாராயணன், வட்டாட்சியா் செந்தில்குமாா் ஆகியோா் காயமடைந்தவா்களை மருத்துவமனையில் சந்தித்து ஆறுதல் கூறினா்.

சீா்காழி மோட்டாா் வாகன ஆய்வாளா் விஸ்வநாதன், சீா்காழி டிஎஸ்பி லாமெக் ஆகியோா் விபத்து குறித்து விசாரணை நடத்தினா். மேலும், வைத்தீஸ்வரன்கோயில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com