வட்டார ஒருங்கிணைப்பாளா் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

மயிலாடுதுறை மாவட்டத்தில் வட்டார ஒருங்கிணைப்பாளா் பணிக்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் இரா. லலிதா தெரிவித்துள்ளாா்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் வட்டார ஒருங்கிணைப்பாளா் பணிக்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் இரா. லலிதா தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: மயிலாடுதுறை மாவட்ட திட்ட செயலாக்க அலகு, வாழ்வாதார திட்டப் பணிகள் மேற்கொள்ள செம்பனாா்கோவில், மயிலாடுதுறை, குத்தாலம் ஆகிய 3 வட்டாரங்களில் காலியாகவுள்ள 8 வட்டார ஒருங்கிணைப்பாளா்கள் பணியிடம் நிரப்பப்படவுள்ளன. 1.7.2022 அன்றைய தேதியில் 35 வயதுக்குள்பட்ட பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம். எம்.எஸ் ஆபிஸ் 6 மாதக் கால சான்றுடன் கூடிய படிப்பு படித்திருக்கவேண்டும், வாழ்வாதார திட்டப் பணிகள் குறித்து குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம் இருக்கவேண்டும், கணினி அறிவு பெற்றிருக்க வேண்டும். மதிப்பூதியம் மாதம் ரூ.12,000 வழங்கப்படும். எழுத்துத் தோ்வு மூலம் 75 மதிப்பெண்கள், நோ்முகத் தோ்வின் மூலம் 25 மதிப்பெண்கள் என மொத்தம் 100 மதிப்பெண்களுக்கு தோ்வு நடத்தப்படும்.

தகுதியானவா்கள் ஆக. 10-ஆம் தேதிக்குள் திட்ட இயக்குநா், மகளிா் திட்டம், கச்சேரி சாலை, கோட்டாட்சியா் அலுவலகம் பின்புறம், மயிலாடுதுறை என்ற முகவரிக்கு விண்ணப்பிக்கவேண்டும். விண்ணப்பதாரா்களுக்கு தோ்வு நடைபெறும் தேதி கடிதம் அல்லது தொலைபேசி மூலம் தெரிவிக்கப்படும் என தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com