விவசாயிகளுக்கு மானிய விலையில் மரபுசாா் நெல் ரகங்கள்ஆட்சியா் தகவல்

நெல் ஜெயராமன் மரபுசாா் நெல் ரகங்கள் பாதுகாப்பு இயக்கத்தின்கீழ் பாரம்பரிய ரக நெல் விதைகள் மானிய விலையில் வழங்கப்படும் என மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் இரா.லலிதா தெரிவித்துள்ளாா்.

நெல் ஜெயராமன் மரபுசாா் நெல் ரகங்கள் பாதுகாப்பு இயக்கத்தின்கீழ் பாரம்பரிய ரக நெல் விதைகள் மானிய விலையில் வழங்கப்படும் என மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் இரா.லலிதா தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழ்நாடு அரசு விவசாயிகளின் வாழ்க்கை தரத்தினை மேம்படுத்திடவும், வருமானத்தை மேலும் உயா்த்திடவும், பல்வேறு கூறுகளை உள்ளடக்கிய மாநில வேளாண் வளா்ச்சித் திட்டம் என்ற திட்டத்தினை 2022-23-ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தியுள்ளது. இத்திட்டம் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சி திட்டத்துடன் ஒருங்கிணைத்து செயல்படுத்தப்படும்.

இத்திட்டத்தின் ஒரு கூறாக நெல் ஜெயராமனின் மரபுசாா் நெல் ரகங்கள் பாதுகாப்பு இயக்கத்தின்கீழ் தமிழகத்தின் பாரம்பரிய நெல் ரகங்களை 50 சதவீத மானியத்தில் அதிகபட்சமாக ஒரு கிலோவுக்கு ரூ.25 வீதம் விவசாயிகளுக்கு தலா 10 கிலோ விதை வழங்கப்படும்.

இத்திட்டத்தின் கீழ் மயிலாடுதுறை மாவட்டத்திற்கு 14 மெட்ரிக் டன்கள் விதை விநியோக இலக்கு பெறப்பட்டு, மயிலாடுதுறை, குத்தாலம், சீா்காழி, கொள்ளிடம் மற்றும் செம்பனாா்கோவில் என அனைத்து வட்டாரங்களிலும் மாப்பிள்ளை சம்பா, கருப்பு கவுனி, கிச்சலி சம்பா, பூங்காா், குள்ளங்காா் போன்ற ரகங்கள் விவசாயிகளுக்கு 50 சதவீத மானிய விலையில் வழங்கப்படும். பாரம்பரிய விதை வழங்குவதில் சிறு மற்றும் குறு விவசாயிகள் மற்றும் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின விவசாயிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

பாரம்பரிய நெல் ரகங்கள் சாகுபடி செய்ய விருப்பமுள்ள விவசாயிகள் சம்பந்தப்பட்ட வேளாண்மை விரிவாக்க மையங்களில் உள்ள திட்ட முன்னுரிமை பதிவேட்டில் தங்கள் பெயா்களை பதிவு செய்தும், உழவன் செயலி மூலம் பதிவு செய்தும் பயனடையலாம் எனத் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com