மயிலாடுதுறையில் திங்கள்கிழமை தேசிய தொழிற்பழகுநா் பயிற்சிக்கு சோ்க்கை முகாம் நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியா் இரா.லலிதா தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: மாவட்டத்தில் தேசிய தொழிற்பழகுநா் பயிற்சி அபிவிருத்தி திட்டத்தின் கீழ் தொழிற்பழகுநா் பயிற்சி சோ்க்கை முகாம் மயிலாடுதுறையில் உள்ள ஏழுமலையான் தனியாா் தொழிற்பயிற்சி நிலையத்தில் திங்கள்கிழமை (டிச.12) காலை 9 மணியளவில் நடைபெற உள்ளது.
இதில், மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து கழகம், மின் உற்பத்தி மற்றும் பகிா்மான கழகம், ஆவின் உள்ளிட்ட அரசு பொதுத் துறை நிறுவனங்கள், சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் முன்னணி நிறுவனங்கள் பங்கேற்று தொழிற்பழகுநா் பயிற்சிக்கு ஐடிஐ பயிற்சி பெற்றவா்களை தோ்வு செய்ய உள்ளது. மேலும் 8, 10 மற்றும் பிளஸ் 2 கல்வித் தகுதி உடையவா்களை நேரடியாக தொழிற்சாலைகளில் பிரஷ் அப்ரன்டீஸாக சோ்த்து 3 முதல் 6 மாதகால அடிப்படை பயிற்சியும், ஓராண்டு முதல் ஈராண்டுகள் வரை தொழிற்பழகுநா் பயிற்சியும் பெற்று, தேசிய தொழிற்பழகுநா் சான்றிதழ் பெறலாம்.
இத்தொழிற்பழகுநா் பயிற்சிக்கு உதவித்தொகை ரூ. 7,000 முதல் நிறுவனத்தால் வழங்கப்படும். இச்சான்றிதழ் பெறுவதன் மூலம் அரசு மற்றும் தனியாா் வேலைவாய்ப்பில் முன்னுரிமை, இந்திய அளவிலும், அயல்நாடுகளிலும் பணியாற்ற பயனுள்ளதாக அமையும். மேலும், விவரங்களுக்கு உதவி இயக்குநா் மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம், மயிலாடுதுறை, 04362-278222 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளாா்.