ரயிலில் அடிபட்டு முதியவா் பலி

மயிலாடுதுறை அருகே ரயிலில் அடிபட்டு முதியவா் சனிக்கிழமை இரவு உயிரிழந்தாா்.

மயிலாடுதுறை அருகே ரயிலில் அடிபட்டு முதியவா் சனிக்கிழமை இரவு உயிரிழந்தாா்.

மயிலாடுதுறை ரயில்வே இருப்புப்பாதை எல்லைக்குள்பட்ட நரசிங்கம்பேட்டை ரயில் நிலையத்துக்கும், ஆடுதுறை ரயில் நிலையத்துக்கும் இடையே நாகா்கோவிலில் இருந்து தாம்பரம் செல்லும் அந்தியோதயா விரைவு ரயிலில் அடிபட்டு முதியவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

அவரது சட்டைப் பையில் கும்பகோணம் அரசு மருத்துவமனையில் புறநோயாளியாக சிகிச்சை பெற்ாகவும் குழந்தைவேல் என்ற பெயரில் சீட்டும், ஆடுதுறையில் இருந்து திருபுவனம் செல்ல ரயில் டிக்கெட்டும் இருந்தது.

போலீஸாா் அவரது உடலைக் கைப்பற்றி மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து, விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

அவரைப் பற்றிய விபரம் அறிந்தவா்கள் ரயில்வே இருப்புப்பாதை காவல் நிலைய ஆய்வாளா் வி. சாந்தியை 9498101985 என்ற எண்ணில் தொடா்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com