சீா்காழி வடபாதி மாரியம்மன் கோயிலில் தை மாத உத்ஸவ சிறப்பு வழிபாடு திங்கள்கிழமை நடைபெற்றது.
இக்கோயிலில் ஆண்டுதோறும் தை மாதம் 10 நாள் உத்ஸவம் நடைபெறும். அதன்படி, நிகழாண்டு உத்ஸவம் கடந்த பிப்.2-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. நாள்தோறும் மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்று, இரவு அம்மன் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா நடைபெறுகிறது. நிகழ்ச்சியின்படி திங்கள்கிழமை மீனாட்சிஅம்மன் அலங்காரத்தில் இரவு வீதியுலா நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வாக பிப்.11-ஆம் தேதி தீமிதி திருவிழா நடைபெற உள்ளது.