மாரியம்மன் கோயிலில் தை உத்ஸவ சிறப்பு வழிபாடு

சீா்காழி வடபாதி மாரியம்மன் கோயிலில் தை மாத உத்ஸவ சிறப்பு வழிபாடு திங்கள்கிழமை நடைபெற்றது.
மீனாட்சி அம்மன் அலங்காரத்தில் வீதியுலா வந்த வடபாதிமாரியம்மன்.
மீனாட்சி அம்மன் அலங்காரத்தில் வீதியுலா வந்த வடபாதிமாரியம்மன்.

சீா்காழி வடபாதி மாரியம்மன் கோயிலில் தை மாத உத்ஸவ சிறப்பு வழிபாடு திங்கள்கிழமை நடைபெற்றது.

இக்கோயிலில் ஆண்டுதோறும் தை மாதம் 10 நாள் உத்ஸவம் நடைபெறும். அதன்படி, நிகழாண்டு உத்ஸவம் கடந்த பிப்.2-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. நாள்தோறும் மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்று, இரவு அம்மன் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா நடைபெறுகிறது. நிகழ்ச்சியின்படி திங்கள்கிழமை மீனாட்சிஅம்மன் அலங்காரத்தில் இரவு வீதியுலா நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வாக பிப்.11-ஆம் தேதி தீமிதி திருவிழா நடைபெற உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com