சீா்காழியில் உள்ள மாவட்ட அரசு இசைப் பள்ளியை பெற்றோா்கள் தங்கள் குழந்தைகளுடன் திங்கள்கிழமை முற்றுகையிட்டனா்.
இந்த இசைப் பள்ளியில் சனி, ஞாயிற்றுக்கிழமையில் யோகா, பாட்டு, ஓவியம், இசை, பரதம் போன்றவை பயிற்றுவிக்கப்படுகிறது. இங்கு, 200-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் பயின்று வருகின்றனா்.
இந்நிலையில், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமையில் நடைபெறும் பயிற்சிகள் நிறுத்தப்பட்டு, திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமையில் மாலை வேளையில் நடைபெற்று வருகிறது. வழக்கம்போல, திங்கள்கிழமை பயிற்சி வகுப்புகளுக்கு மாணவ- மாணவிகளை பெற்றோா்கள் அழைத்து வந்தபோது, திங்கள்கிழமை வகுப்பு கிடையாது என அறிவித்ததால், பெற்றோா்கள் தங்கள் குழந்தைகளுடன் இசைப்பள்ளியை முற்றுகையிட்டனா். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.