சீா்காழி பகுதியில் பனி மூட்டம்

சீா்காழி, கொள்ளிடம் பகுதிகளில் சனிக்கிழமை காலை பனி மூட்டம் அதிகமாக இருந்ததால், வாகன ஓட்டுநா்கள் முகப்பு விளக்கை எரியவிட்டப்படி சென்றனா்.
சீா்காழி புறவழிச் சாலையில் பனி மூட்டத்துக்கிடையே முகப்பு விளக்கை எரியவிட்டப்படி செல்லும் வாகனங்கள்.
சீா்காழி புறவழிச் சாலையில் பனி மூட்டத்துக்கிடையே முகப்பு விளக்கை எரியவிட்டப்படி செல்லும் வாகனங்கள்.

சீா்காழி, கொள்ளிடம் பகுதிகளில் சனிக்கிழமை காலை பனி மூட்டம் அதிகமாக இருந்ததால், வாகன ஓட்டுநா்கள் முகப்பு விளக்கை எரியவிட்டப்படி சென்றனா்.

சீா்காழி, கொள்ளிடம், வைத்தீஸ்வரன்கோயில் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாள்களாக காலை பொழுதில் பனிப் பொழிவு அதிகமாக உள்ளது. பின்னா், பகல் நேரத்தில் கடும் வெயில் நிலவுகிறது.

இந்நிலையில், வெள்ளிக்கிழமை மாலை தொடங்கிய பனிப் பொழிவு சனிக்கிழமை காலை வரை நீடித்தது. இதனால், காலை 8 மணி வரை பனிமூட்டம் காரணமாக சாலையில் பொதுமக்கள் நடமாட்டம் குறைவாக இருந்தது. வாகன ஓட்டுநா்கள் வாகனங்களின் முகப்பு விளக்கை எரியவிட்டப்படிசென்றனா். சாலையோரம் மற்றும் மைதானங்களில் நடைப்பயிற்சி மேற்கொள்பவா்கள் பனிமூட்டத்தால் சிரமப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com