எரிபொருள் மற்றும் அத்தியாவசியப் பொருள்கள் விலையேற்றத்தைக் கண்டித்து, மயிலாடுதுறையில் நாம் தமிழா் கட்சி சாா்பில் சனிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
மயிலாடுதுறை கிட்டப்பா அங்காடி முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, கட்சியின் மக்களவைத் தொகுதி உறுப்பினா் சு. கலியபெருமாள் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலாளா் தமிழன் காளிதாசன் முன்னிலை வகித்தாா்.
கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளா் முகம்மது சா்வத்கான் பங்கேற்று உரையாற்றினாா்.
ஆா்ப்பாட்டத்தில், அத்தியாவசிய பொருள்கள் விலை உயா்வுக்கு காரணமான பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு உள்ளிட்டவற்றின் விலையை குறைக்க வேண்டும், மயிலாடுதுறை தலைமை அஞ்சலகத்தில் வடமாநிலத்தவா்கள் 20 போ் பணியமா்த்தப்பட்டதை திரும்பப் பெற வேண்டும், சுங்கச் சாவடி கட்டண உயா்வைக் குறைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா்.