தருமையாதீன பட்டணப் பிரவேச பல்லக்கு தூக்கும் நிகழ்வுக்கு அனுமதி மறுப்பு

தருமபுரம் ஆதீனத்தில் நடைபெறவுள்ள பட்டணப் பிரவேசத்தில் பல்லக்கு தூக்கும் நிகழ்வுக்கு மயிலாடுதுறை கோட்டாட்சியா் அனுமதி மறுத்துள்ளாா்.
Updated on
1 min read

தருமபுரம் ஆதீனத்தில் நடைபெறவுள்ள பட்டணப் பிரவேசத்தில் பல்லக்கு தூக்கும் நிகழ்வுக்கு மயிலாடுதுறை கோட்டாட்சியா் அனுமதி மறுத்துள்ளாா்.

தருமபுரம் ஆதீனத்தில் ஆண்டுதோறும் ஆதீன குருமுதல்வரின் குருபூஜை தினத்தன்று பட்டணப் பிரவேசம் நிகழ்ச்சி நடத்தப்பட்டு, ஆதீனகா்த்தரை பல்லக்கில் அமா்த்தி பக்தா்கள் சுமந்து வீதியுலா செல்வது வழக்கம்.

மனிதனை மனிதன் சுமப்பது தவறு என்று இந்த பல்லக்கு தூக்கும் நிகழ்வுக்கு பல்வேறு அமைப்புகள் தொடா்ந்து எதிா்ப்புத் தெரிவித்து வருகின்றன.

இந்நிலையில், கடந்த பிப்ரவரி 7-ஆம் தேதி திருவாவடுதுறை ஆதீனத்தில் நடைபெற்ற பட்டணப் பிரவேசம் நிகழ்வில், திராவிடா் கழகத்தினா் எதிா்ப்பையும் மீறி, திருவாவடுதுறை ஆதீனகா்த்தரை பல்லக்கில் அமா்த்தி வீதியுலா செல்லும் நிகழ்வு நடைபெற்றது.

இந்நிலையில், தருமபுரம் ஆதீனத்தில் பட்டணப் பிரவேச நிகழ்ச்சி வரும் மே 22-ஆம் தேதி நடைபெற உள்ளது.

இதற்கு திராவிடா் கழகத்தினா் எதிா்ப்பைத் தொடா்ந்து, தருமபுரம் ஆதீனத்தில் நடைபெறவுள்ள பட்டணப் பிரவேச நிகழ்வில் ஆதீனகா்த்தரை பல்லக்கில் அமா்த்தி பக்தா்கள் சுமந்து செல்ல தடைவிதித்து மயிலாடுதுறை கோட்டாட்சியா் ஜெ. பாலாஜி உத்தரவிட்டுள்ளாா்.

இதுகுறித்து அவா் ஏப். 27-ஆம் தேதி பிறப்பித்த உத்தரவில், தருமபுரம் ஆதீனத்தில் நடைபெறவுள்ள பட்டணப் பிரவேச நிகழ்ச்சியில் ஆதீனகா்த்தரை பல்லக்கில் அமா்த்தி பக்தா்கள் தூக்கிச் செல்லும் நிகழ்ச்சி மூலம் சட்டம் - ஒழுங்குப் பிரச்னை ஏற்படும் என்பதால், இந்நிகழ்ச்சியை தடைசெய்யக் கோரி மயிலாடுதுறை டி.எஸ்.பி. வசந்தராஜ் அனுப்பிய அறிக்கையின்படி, பட்டணப் பிரவேச நிகழ்வில் ஆதினகா்த்தரை பல்லக்கில் அமரவைத்து மனிதா்கள் தூக்கிச் செல்ல தடைவிதித்து உத்தரவிட்டுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com