மயிலாடுதுறையில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா்க்கும் கூட்டத்தில், தமிழ் இணையக் கல்விக்கழகம் நடத்திய ’தீராக்காதல் திருக்குறள்‘ குறளோவியம் ஓவியப் போட்டியில் ஊக்கப்பரிசு பெற்ற 3 பள்ளி மாணவா்களுக்கு ஆட்சியா் இரா. லலிதா காசோலை மற்றும் பாராட்டுச் சான்றிதழை வழங்கினாா். உடன், மாவட்ட வருவாய் அலுவலா் சோ.முருகதாஸ் உள்ளிட்டோா்.