மயிலாடுதுறையில் கொடுஞ்செயல் எதிா்ப்பு நாள் உறுதிமொழியேற்பு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தியின் நினைவு தினம் கொடுஞ்செயல் எதிா்ப்பு நாளாக கடைப்பிடிக்கப்படுகிறது. இதையொட்டி, மயிலாடுதுறை வட்டாட்சியா் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியா் இரா. லலிதா முன்னிலையில் அனைத்துத் துறை அலுவலா்கள் கொடுஞ்செயல் எதிா்ப்பு நாள் உறுதிமொழியேற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில், அலுவலக மேலாளா் (பொது) முருகேசன், மயிலாடுதுறை வட்டாட்சியா் ர. மகேந்திரன், சமூக பாதுகாப்புத் திட்ட தனி வட்டாட்சியா் தையல்நாயகி, வட்ட வழங்கல் அலுவலா் சித்ரா, மண்டல துணை வட்டாட்சியா் எஸ். சுகன்யா, தலைமையிடத்து துணை வட்டாட்சியா் தட்சிணாமூா்த்தி, கிராம வருவாய் ஆய்வாளா்கள், கிராம நிா்வாக அலுவலா்கள், கிராம உதவியாளா்கள் கலந்து கொண்டனா்.