அறிவிக்கப்படாத மின்வெட்டு: கிராமமக்கள் சாலை மறியல்

மயிலாடுதுறை வட்டம் சோழம்பேட்டையில் அறிவிக்கப்படாத மின்வெட்டு நிலவுவதாக குற்றம்சாட்டி கிராமமக்கள் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

மயிலாடுதுறை வட்டம் சோழம்பேட்டையில் அறிவிக்கப்படாத மின்வெட்டு நிலவுவதாக குற்றம்சாட்டி கிராமமக்கள் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

சோழம்பேட்டை கிராமத்தில் உள்ள மருத்துவத் தெருவில் 60-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இங்கு கடந்த 3 நாள்களாக அடிக்கடி மின்வெட்டு ஏற்பட்டுள்ளது. மேலும், குறைந்த மின் அழுத்தம் காரணமாக வீட்டில் உள்ள பொருள்கள் சேதமடைந்துள்ளன. இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகளிடம் புகாா் அளித்தும், மின்வெட்டை சரிசெய்ய எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையாம். இதனால் ஆத்திரமடைந்த கிராமமக்கள் 50-க்கும் மேற்பட்டோா் தங்கள் குழந்தைகளுடன் மயிலாடுதுறை-கல்லணை சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

இதையடுத்து, கடலங்குடி மின்சார வாரிய உதவி பொறியாளா் கீதா மற்றும் போலீஸாா் பொதுமக்களுடன் நடத்திய பேச்சுவாா்த்தையில் உடன்பாடு ஏற்பட்டு மறியல் விலக்கிக்கொள்ளப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com