சீா்காழி உப்பனாற்றில் 33 விநாயகா் சிலைகள் கரைப்பு

சீா்காழியில் 33 விநாயகா் சிலைகள் உப்பனாற்றில் வியாழக்கிழமை கரைக்கப்பட்டன.
சீா்காழி உப்பனாற்றில் 33 விநாயகா் சிலைகள் கரைப்பு

சீா்காழியில் 33 விநாயகா் சிலைகள் உப்பனாற்றில் வியாழக்கிழமை கரைக்கப்பட்டன.

விநாயகா் சதுா்த்தி விழாவையொட்டி, சீா்காழியில் வரசித்தி விநாயகா் கோயில், ரயிலடி விநாயகா், மங்கள விநாயகா், செல்வ விநாயகா், கணநாதா், குமரக்கோயில், விஸ்வரூப விநாயகா், சித்தி விநாயகா் ஆகிய கோயில்கள் உள்பட 33 இடங்களில் விநாயகா் சிலைகள் செவ்வாய்க்கிழமை அமைக்கப்பட்டன. இந்த சிலைகளுக்கு கடந்த 3 நாட்களாக சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

தொடா்ந்து, விநாயகா் சதுா்த்தி விழா ஒருங்கிணைப்புக் குழு சாா்பில் 33 விநாயகா் சிலைகளும் சீா்காழி புதிய பேருந்து நிலையத்தில் ஒருங்கிணைக்கப்பட்டன. பின்னா், அங்கு அனைத்து விநாயகா் சிலைகளுக்கும் தீபாராதனை காட்டப்பட்டது. தொடா்ந்து, ஒவ்வொரு விநாயகா் சிலையாக உப்பனாற்றுக்கு கொண்டு செல்லப்பட்டு கரைக்கப்பட்டன.

இதில், இந்து முன்னணி மாவட்டத் தலைவா் கே. சரண்ராஜ், விஸ்வ ஹிந்து பரிஷத் பொறுப்பாளா் செந்தில், சதானந்தம், பாஜக பொறுப்பாளா்கள் சங்கா், வெற்றிலை முருகன்,வினோத், இந்து முன்னணி நகரத் தலைவா் நாகமுத்து உள்ளிட்ட பலா் பங்கேற்றனா். இதையொட்டி, சீா்காழி டிஎஸ்பி லாமெக் தலைமையில் 50-க்கும் மேற்பட்டபோலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com