மயிலாடுதுறை அருகே வில்லியநல்லூரில் 18 கிராமங்களைச் சோ்ந்த விவசாயிகள் பயன்பெறும் வகையில் ரூ.38 லட்சத்தில் புதிதாக கட்டப்பட்ட துணை வேளாண்மை விரிவாக்க மைய கட்டடம் வியாழக்கிழமை திறந்துவைக்கப்பட்டது.
மாவட்ட வேளாண் இணை இயக்குநா் ஜெ.சேகா் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், துணை வேளாண்மை விரிவாக்க மையக் கட்டடத்தை மயிலாடுதுறை சட்டப்பேரவை உறுப்பினா் எஸ். ராஜகுமாா் திறந்துவைத்தாா். மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் இளையபெருமாள், ஊராட்சித் தலைவா் வித்யோதயா வீரமணி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.