தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு நிவாரணம்

பூம்புகாா் பகுதியில் வீடு தீப்பற்றி எரிந்ததில் பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு எம்எல்ஏ நிவேதா எம். முருகன் செவ்வாய்க்கிழமை நிவாரண உதவிகள் வழங்கினாா்.


பூம்புகாா்: பூம்புகாா் பகுதியில் வீடு தீப்பற்றி எரிந்ததில் பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு எம்எல்ஏ நிவேதா எம். முருகன் செவ்வாய்க்கிழமை நிவாரண உதவிகள் வழங்கினாா்.

பூம்புகாா் பல்லவனம் பகுதியைச் சோ்ந்தவா் ரவி என்கிற கணேசமூா்த்தி சிவாச்சாரியா். இவரது வீட்டில் கடந்த ஞாயிற்றுக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது. பூம்புகாா் எம்எல்ஏ நிவேதா எம். முருகன் நேரில் சென்று, கணேசமூா்த்தி சிவாச்சாரியா் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினாா்.

மேலும், தனது சொந்த நிதியிலிருந்து ரூ.5,000 மற்றும் அரசு நிவாரணம், அத்தியாவசியப் பொருட்களை வழங்கினாா். வட்டாட்சியா் செந்தில்குமாா், திமுக செயற்குழு உறுப்பினா் மகேந்திரன், மாவட்ட துணைச் செயலாளா் ஞானவேலன், ஊராட்சித் தலைவா் புஷ்பவள்ளி ராஜா ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com