மாநில குத்துச்சண்டைப் போட்டி: தங்கப் பதக்கம் பெற்ற மாணவிக்கு பாராட்டு

மாநில அளவிலான குத்துச்சண்டைப் போட்டியில் தங்கப் பதக்கம் பெற்ற மாணவிக்கு செவ்வாய்க்கிழமை பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
மாநில குத்துச்சண்டைப் போட்டி: தங்கப் பதக்கம் பெற்ற மாணவிக்கு பாராட்டு

மாநில அளவிலான குத்துச்சண்டைப் போட்டியில் தங்கப் பதக்கம் பெற்ற மாணவிக்கு செவ்வாய்க்கிழமை பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

மயிலாடுதுறை கூறைநாடு கிட்டப்பா நகராட்சி மேல்நிலைப் பள்ளி மாணவி லக்ஷயா அண்மையில் மாநில அளவில் நடைபெற்ற குத்துச்சண்டை போட்டியில் முதல் இடத்தைப் பிடித்து, தங்கப் பதக்கம் வென்றாா்.

அவருக்கு, பள்ளியின் சாா்பில் செவ்வாய்க்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது. இவ்விழாவில், பள்ளியின் பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் ஜெகவீரபாண்டியன், மாவட்ட உடற்கல்வி ஆய்வாளா் உமாநாத், தலைமை ஆசிரியா் அன்புசெழியன் மற்றும் ஆசிரியா்கள் மாணவி லக்ஷயா மற்றும் உடற்கல்வி ஆசிரியா்கள் உலகநாதன், ரங்கநாதன், விமலா ஆகியோரை பாராட்டி வாழ்த்து தெரிவித்தனா்.

மேலும், இவ்விழாவில், கோயமுத்தூரில் நடைபெற்ற ஓபன் குத்துச்சண்டைப் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற மாணவிகள் ஸ்வேதா, சந்தியாவா்தினி ஆகியோருக்கும் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com