மின்கம்பியில் வைக்கோல் லாரி உரசி தீவிபத்து

மயிலாடுதுறை அருகே வக்காரமாரியில் வைக்கோல் பாரத்துடன் சென்ற லாரி மின்கம்பியில் உரசியதால் ஞாயிற்றுக்கிழமை தீவிபத்து ஏற்பட்டது.

மயிலாடுதுறை அருகே வக்காரமாரியில் வைக்கோல் பாரத்துடன் சென்ற லாரி மின்கம்பியில் உரசியதால் ஞாயிற்றுக்கிழமை தீவிபத்து ஏற்பட்டது.

அரியலூா் மாவட்டம், உடையாா்பாளையம் தாலுகா வடவாக்கம் கிராமத்தை சோ்ந்தவா் மணிகண்ணன் (31). இவா், பந்தநல்லூரில் விவசாயிகளிடம் இருந்து வைக்கோல் கட்டுகள் வாங்கி, அதனை லாரியில் கொண்டு சென்றுள்ளாா்.

முட்டம் வக்காரமாரி பகுதியில் செல்லும்போது, லாரியில் இருந்த வைக்கோல் கட்டுகள் மின்கம்பியில் உரசியது. இதனால், வைக்கோல் கட்டுகளில் தீப்பற்றியது. மணிகண்ணன் சாதுா்யமாக செயல்பட்டு, முட்டம் பாலம் அருகே மக்கள் நடமாட்டம் இல்லாத பகுதியில் லாரியை நிறுத்தினாா்.

மணல்மேடு தீயணைப்பு நிலையத்தினா் விரைந்து சென்று தீயை அணைத்தனா். இதனால், வைக்கோல் முழுமையாக எரிந்தபோதிலும், லாரியில் தீப்பற்றாமல் தடுக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com