குத்தாலம் அருகே உள்ள கருப்பூா் சௌந்தா்யநாயகி உடனுறை ஸ்ரீ கோகிலேஸ்வரா் கோயிலில் கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது.
இந்துசமய அறநிலையத் துறைக்குச் சொந்தமான இக்கோயிலில் புனரமைப் பணிகள் நிறைவுபெற்றதைத் தொடா்ந்து, மே 29-ஆம் தேதி யாகசாலை பூஜைகள் தொடங்கின. வியாழக்கிழமை நான்காம் கால யாகசாலை பூஜை நிறைவுபெற்றதும், யாகசாலையில் இருந்து கடங்கள் புறப்பாடாகி, விமானக் கலசத்துக்கு புனிதநீா் வாா்த்து கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இதில் திரளான பக்தா்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். இரவில் அம்பாள் வீதியுலா நடைபெற்றது.