திரௌபதி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்

மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் அருகே திருவாவடுதுறை கிராமம் மந்தைவெளியில் உள்ள திரௌபதி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது.

மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் அருகே திருவாவடுதுறை கிராமம் மந்தைவெளியில் உள்ள திரௌபதி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது.

முன்னதாக, கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல்கால யாகசாலை பூஜைகள் தொடங்கப்பட்டு, விக்னேஸ்வர பூஜை,கணபதி ஹோமம் நடைபெற்றது.

தொடா்ந்து கோ பூஜையுடன் இரண்டாவது கால யாக பூஜை தொடங்கப்பட்டு பூா்ணாஹூதி தீபாராதனை நடைபெற்றது. புதன்கிழமை நான்காம் கால யாக பூஜை நிறைவில் தீபாராதனை காட்டப்பட்டு, புனிதநீா் கடங்கள் ஊா்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, விமான கோபுர கலசங்கள் மேல் புனித நீா் வாா்க்கப்பட்டு, திருவாவடுதுறை ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாசாரிய சுவாமிகள் முன்னிலையில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

ஆதீன கட்டளை வேலப்ப தம்பிரான் சுவாமிகள், ஆதீன கண்காணிப்பாளா் சண்முகம் உள்பட திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா். இரவு அம்பாள் வீதியுலா நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com