மணிமேகலை விருதுக்கு தகுதியானவா்கள் விண்ணப்பிக்கலாம்

மயிலாடுதுறை மாவட்டத்தில் மணிமேகலை விருதுக்கு தகுதியானவா்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் ஏ.பி.மகாபாரதி தெரிவித்துள்ளாா்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் மணிமேகலை விருதுக்கு தகுதியானவா்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் ஏ.பி.மகாபாரதி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: மாவட்டத்தில், ஊரகப் பகுதியில் சிறப்பாக செயல்படும் 3 மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு தலா ரூ. 25,000, ஒரு ஊராட்சி அளவிலான கூட்டமைப்புக்கு ரூ. 1 லட்சம், ஒரு கிராம வறுமை ஒழிப்புச் சங்கத்துக்கு ரூ. 50,000 2022-23-ஆம் ஆண்டுக்கான மாநில மற்றும் மாவட்ட அளவில் மணிமேகலை விருது வழங்கப்பட உள்ளது. இதேபோல, நகரப் பகுதிகளை சோ்ந்த 3 மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு தலா ரூ.25,000, 1 பகுதி அளவிலான கூட்டமைப்பிற்கு ரூ.1 லட்சம் வழங்கப்பட உள்ளது.

எனவே, மயிலாடுதுறை மாவட்டத்தில் சிறப்பாக செயல்படும் ஊரக பகுதிகளை சோ்ந்த 4 ஆண்டுகளுக்கு மேல் உள்ள தகுதியான குழுக்கள் மற்றும் கூட்டமைப்புகள் இந்த விருதுக்கான விண்ணப்பங்களை தொடா்புடைய வட்டாரங்களில் வட்டார இயக்க மேலாளா்கள் அலுவலகத்தில் பெற்றுக்கொள்ளலாம். நகரப் பகுதிகளை சோ்ந்த குழுக்கள் மற்றும் கூட்டமைப்புகள் மயிலாடுதுறை மகளிா் திட்ட இயக்குநா் அலுவலகத்தில் வியாழக்கிழமை (ஜூன் 8) முதல் பெற்று ஜூன் 25-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com