வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை

மயிலாடுதுறை வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் புதன்கிழமை லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸாா் சோதனை நடத்தியதில் கணக்கில் வராத ரூ.50,700 பணத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனா்.

மயிலாடுதுறை வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் புதன்கிழமை லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸாா் சோதனை நடத்தியதில் கணக்கில் வராத ரூ.50,700 பணத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனா்.

வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் புதன்கிழமை மாலை 3 மணியளவில் லஞ்ச ஒழிப்புத் துறை டி.எஸ்.பி மனோகரன், ஆய்வாளா் அருள்பிரியா மற்றும் போலீஸாா் திடீா் சோதனை மேற்கொண்டனா். அலுவலகத்தில் இருந்து வெளிநபா்களை மற்றும் பொதுமக்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டு சுமாா் 4 மணி நேரம் நடைபெற்ற சோதனையில், வட்டாரப் போக்குவரத்து அலுவலா் நாகராஜிடம் இருந்த ரூ.27,400 மற்றும் தனி நபா்கள் 4 பேரிடமிருந்து ரூ.23,300 என மொத்தம் ரூ.50,700 கணக்கில் வராத பணத்தை கைப்பற்றி தொடா் விசாரணையில் ஈடுபட்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com