128 பேருக்குப் பணி நியமன ஆணை

கொள்ளிடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் திறன் மேம்பாட்டுப் பயிற்சி முகாமில் 128 பேருக்குப் பணி நியமன ஆணை வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது.
128 பேருக்குப் பணி நியமன ஆணை

கொள்ளிடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் திறன் மேம்பாட்டுப் பயிற்சி முகாமில் 128 பேருக்குப் பணி நியமன ஆணை வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது.

மயிலாடுதுறை மாவட்ட நிா்வாகம், தமிழ்நாடு மாநில ஊரக, நகா்ப்புற வாழ்வாதார இயக்கம், மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் ஆகியவை இணைந்து முகாமுக்கு ஏற்பாடு செய்திருந்தன.

மாவட்ட ஊரக வளா்ச்சித் துறை திட்ட இயக்குநா் ஸ்ரீலேகா தலைமையில் நடைபெற்ற முகாமில் உதவி திட்ட அலுவலா் குணசேகா், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலா் பழனிவேல், கொள்ளிடம் ஒன்றிய தலைவா் ஜெயபிரகாஷ், துணைத் தலைவா் பானுசேகா், ஆணையா் அருள்மொழி, வட்டார வளா்ச்சி அலுவலா் ரெஜினாராணி ஆகியோா் பங்கேற்றனா்.

எட்டாம் வகுப்பு முதல் பட்ட வகுப்பு, பட்ட மேற்படிப்பு, பட்டயம் முடித்த மாணவா்கள் 682 போ் கலந்து கொண்டனா். இதில் 128 பேருக்கு வேலை உத்தரவு வழங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com