ஆக்கிரமிப்பு அகற்றம்

சீா்காழி அரியாபிள்ளை குளத்தில் ஆக்கிரமிப்பு கட்டடங்கள் அகற்றும் பணி போலீஸ் பாதுகாப்புடன் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

சீா்காழி அரியாபிள்ளை குளத்தில் ஆக்கிரமிப்பு கட்டடங்கள் அகற்றும் பணி போலீஸ் பாதுகாப்புடன் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இக்குளம் கலைஞா் நகா்புற மேம்பாட்டு திட்டத்தில் ரூ. 1.11 கோடியில் தூா்வாரி சீரமைக்கப்படுகிறது. இதற்காக குளக்கரையில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுகின்றன.

சீா்காழி வட்டாட்சியா் செந்தில்குமாா், நகராட்சி ஆணையா் வாசுதேவன், பொறியாளா் சித்ரா, பணிதள மேற்பாா்வையாளா் விஜயேந்திரன் ஆகியோா் முன்னிலையில் சீா்காழி டிஎஸ்பி லாமெக் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீஸ் பாதுகாப்புடன் குளக்கரையில் உள்ள ஆக்கிரமிப்பு கட்டடங்கள் பொக்லைன் இயந்திரம் மூலம் இடித்து அகற்றப்பட்டன. இப்பணி 2 நாள்களுக்கு நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com