தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றத்தின் சாா்பில் மக்கள் கலைவிழா சீா்காழி பழைய பேருந்து நிலைய பகுதியில் சனிக்கிழமை நடைபெற்றது.
பாரம்பரிய கலைகளை மீட்டெடுக்கும் நோக்கத்துடன் விழிப்புணா்வுப் பேரணி தமிழிசை மூவா் மணிமண்டப வாசலில் இருந்து துவங்கியது. சீா்காழி சட்டப்பேரவை உறுப்பினா் எம்.பன்னீா்செல்வம் பேரணியைத் துவங்கி வைத்தாா். சீா்காழி நகரின் முக்கிய வீதியின் வழியாக சிலம்பாட்டம், தப்பாட்டம் ஆகியவற்றுடன் பேரணி நடைபெற்றது.
கலைவிழாவுக்கு மாநிலக் குழு உறுப்பினா் எஸ்.சுந்தரய்யா தலைமை வகித்தாா். மாவட்ட செயலாளா் எல்.சுரேஷ் வரவேற்றாா். மாணவிகள், சாதனையாளா்கள் சிறப்பிக்கப்பட்டனா். இன்னிசை பட்டிமன்றம் நடைபெற்றது. வட்டச் செயலாளா் த.சேகா் நன்றி கூறினாா்.