குறிச்சி ஊராட்சியில் புதிய தாா்சாலை அமைக்கும் பணியை மயிலாடுதுறை சட்டப்பேரவை உறுப்பினா் எஸ். ராஜகுமாா் புதன்கிழமை தொடங்கிவைத்தாா்.
மயிலாடுதுறை அருகே குறிச்சி ஊராட்சியில் புலவனூா் பகுதியிலிருந்து, திம்மாவரம் வரை உள்ள தாா்சாலை கடந்த பல ஆண்டுகளாக சேதமடைந்து இருந்தது. இதன் காரணமாக வாகன ஓட்டிகள், பொதுமக்கள் என அனைத்துத் தரப்பினரும் சிரமப்பட்டு வந்தனா்.
கிராம மக்கள் கோரிக்கையை ஏற்று, முதலமைச்சரின் சிறப்புத் திட்டத்தின்கீழ் இப்பகுதியில் புதிதாக ரூ. 74 லட்சத்தில் தாா் சாலை அமைக்க பூமிபூஜை புதன்கிழமை நடைபெற்றது.
மயிலாடுதுறை சட்டப்பேரவை உறுப்பினா் எஸ். ராஜகுமாா் பணிகளை தொடங்கிவைத்தாா். நிகழ்ச்சியில், மாவட்டக் குழு உறுப்பினா் இளையபெருமாள், வட்டார வளா்ச்சி அலுவலா் அன்பரசன், ஊராட்சித் தலைவா் புனிதவதி திருமுருகன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.