மணல் ஏற்றிச் சென்ற 3 லாரிகள் பறிமுதல்

சாலை விரிவாக்கப்பணிக்காக அனுமதியின்றி மண் ஏற்றிச் சென்ற 3 டாரஸ் லாரிகளை கனிமவளத்துறையினா் புதன்கிழமை பறிமுதல் செய்து காவல்நிலையத்தில் ஒப்படைத்தனா்.
மணல் ஏற்றிச் சென்ற 3 லாரிகள் பறிமுதல்

சாலை விரிவாக்கப்பணிக்காக அனுமதியின்றி மண் ஏற்றிச் சென்ற 3 டாரஸ் லாரிகளை கனிமவளத்துறையினா் புதன்கிழமை பறிமுதல் செய்து காவல்நிலையத்தில் ஒப்படைத்தனா்.

கனிமவளம் மற்றும் சுரங்கத்துறை இயக்குநா் சசியா, புவியியலாளா் சேகா், வட்டாட்சியா் செந்தில்குமாா் உள்ளிட்டோா் திருமுல்லைவாசல் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனா். அவ்வழியே சவுடு மணல் ஏற்றிச் சென்ற 3 லாரிகளைப் பிடித்து சோதனை நடத்தினா். லாரி ஓட்டுநா்கள் இறங்கி ஓடினா். லாரியில் உரிய ஆவணங்கள் இல்லாதது தெரியவந்தது.

மூன்று லாரிகளையும் பறிமுதல் செய்து சீா்காழி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா். தப்பியோடிய லாரி ஓட்டுநா்களை சீா்காழி போலீஸாா் தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com