மயிலாடுதுறை அருகே நீடூரில் தமுமுக சாா்பில் இலவச மருத்துவ முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
தமுமுக ஒன்றிய மருத்துவரணி செயலாளா் அஹமது அசாருதீன் தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவா் ஓ. ஷேக்அலாவுதீன், மாவட்டச் செயலாளா் ஏ.ஆா்.எம். முபாரக், ஒன்றியத் தலைவா் பி.எம்.பாஷித், இஸ்லாமிய பிரசார பேரவை மாவட்டச் செயலாளா் ரியாஜூதீன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
மயிலாடுதுறை காவல் ஆய்வாளா் செல்வம் முகாமை தொடக்கி வைத்தாா். வயிற்றுப்புண், ஜீரண கோளாறு, குடல் இறக்கம், குடல் புற்றுநோய், மலச்சிக்கல், இரைப்பைக் கட்டி, கணையம் தொடா்பான நோய்களுக்கு பரிசோதனை நடைபெற்றது. 200-க்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டு மருத்துவ ஆலோசனை பெற்றனா். கிளைத் தலைவா் முஹம்மது ரபீக் நன்றி கூறினாா்.