மயிலாடுதுறை மாவட்டத்தில் விவசாய விளைபொருள்களை மதிப்புக் கூட்டும் இயந்திரங்கள் மானியத்தில் வழங்கப்படவுள்ளன என்று ஆட்சியா் இரா.லலிதா தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
மயிலாடுதுறை மாவட்டத்தில் நடப்பு 2022-2023-ஆம் ஆண்டில் தேசிய வேளாண் வளா்ச்சி திட்டத்தின்கீழ் அறுவடைக்கு பிந்திய தொழில்நுட்ப மேன்மைத் திட்டத்தின்கீழ் விவசாய விளைபொருட்களுக்கான மதிப்புக்கூட்ட ஏதுவான எண்ணெய் பிழியும் இயந்திரங்கள், சிறிய அரிசி அரவை இயந்திரங்கள், தானியங்கி தேங்காய் மட்டை உரிக்கும் இயந்திரங்கள், வாழைநாா் பிரித்தெடுக்கும் இயந்திரங்கள், சிறிய வகை பருப்பு உடைக்கும் இயந்திரங்கள், நிலக்கடலை தோல் உடைத்து தரம் பிரிக்கும் இயந்திரங்கள், ஒருங்கிணைந்த மசாலா மற்றும் தானியம் அரைக்கும் இயந்திரங்கள், மாவு அரைக்கும் இயந்திரங்கள், நிலக்கடலை செடியிலிருந்து காய் பிரித்தெடுக்கும் இயந்திரங்கள், நெல் உமி நீக்கும் இயந்திரங்கள் மற்றும் இதுபோன்ற ஏனைய இயந்திரங்கள் 40 சதவீத அரசு மானியத்தில் விவசாயிகளுக்கு வழங்கிட உத்தேசிக்கப்பட்டுள்ளது.
இந்த இயந்திரங்களை அரசு மானியத்தில் பெற உதவி செயற்பொறியாளா், வேளாண்மைப் பொறியியல் துறை, துரைக்கண்ணு நகா், சித்தா்காடு, மயிலாடுதுறை அலுவலகத்தை அணுகி விண்ணப்பித்து மூதுரிமை அடிப்படையில் பெற்றுக்கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளாா்.